Monday 19 May 2014

இஸ்லாமிய பொய்பிரச்சாரத்திற்கு இந்துக்கள் பதிலடி

1 1/2 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் டிவி விவாதத்தில் மண்னை கவ்விய முஸ்லீம்கள் அந்த விவாதத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் கட் செய்து எடுத்து பால.கௌதமன் பயந்து ஓடி விட்டதாக செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி.

Tuesday 6 May 2014

பிரிவினைவாதியும் தமிழ்விரோதியுமான கால்டுவெல்லுக்கு தமிழக அரசே 200ம் ஆண்டு நிறைவு விழா எடுப்பது தமிழருக்கு அவமானம்



ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது 200வது ஆண்டு நிறைவு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அறிவியல், மொழியியல், வரலாறு, பண்பாடு என அனைத்து மட்டத்திலும் மிகத் தவறு என்று நிரூபிக்கப்பட்ட மோசடியான, ஆரிய-திராவிட இனவாதத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல்.

கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.

கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழைச் செம்மொழி என்று உணர்த்தியவர் கால்டுவெல் என்று அவர் அறிவித்தார். கால்டுவெல் தமிழை உயர்தனிச் செம்மொழியாக எங்கும் குறிப்பிடவில்லை. கால்டுவெல் செந்தமிழ், கொடும் தமிழ் என்று தமிழை இரண்டாகப் பிரித்துக் காட்டிய தொல்காப்பியத்தின் மரபை மட்டுமே சுட்டிக் காட்டினார். உலக வரிசையில் உயர்தனிச் செம்மொழியான ஐந்து மொழிகளுடன் கால்டுவெல் தமிழை அங்கீகரித்துச் சொல்லவில்லை. கால்டுவெல் எழுதிய ஒப்பிலணக்கன நூலில் ஹல்ல கன்னடா என்று, கொடும் கன்னடம், செம்மையான கன்னடம் என்ற கன்னட மரபையும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கன்னட மொழிக்கு முகவரி கொடுத்தவர் கால்டுவெல் என்று எந்த கன்னடக்காரர்களும் போற்றுவதில்லை.

தமிழர்களை மதமாற்றுவதற்கு அந்நிய கிறிஸ்துவ மதத்திற்கு சில அடையாளங்கள், பிம்பங்கள் தேவைப்பட்டது. அதற்காக மோசடியாக உருவாக்கப்பட்டவரே ராபர்ட் கால்டுவெல். தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்க்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவித்த கால்டுவெல்லுக்கு விழா எடுப்பது தமிழருக்கும் தமிழினத்துக்குமே அவமானம். ஆகவே ஓட்டு அரசியலை ஒதுக்கிவைத்து, தமிழ்த் துரோகிகளுக்கு அங்கீகாரம் தரும் ஈனச் செயல்களை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிடுமாறு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கேட்டுக் கொள்கிறது.

- பால. கௌதமன்.
இயக்குனர்
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்

Source: http://tinyurl.com/mrokwzj


Saturday 19 April 2014

தீவிரவாத நிறப்பிரிகை

நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சில தினங்களுக்கு முன் நடந்த காங்கிரசு சிந்தனைக் கூட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தொண்டர்களிடையே தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று உளறினார். அந்த உளறல் குறித்த கருத்துக்கள், வேதனைகள், கவலைகளை கருத்தில் கொள்ளுமுகமாக சங்க பரிவார அமைப்புகள் போராட்டம், கண்டனம் என்று ஆரம்பித்தார்கள்.
 

Friday 18 April 2014

வெறுப்பும் பேச்சும்

அக்பருதீன் ஒவைசி என்று ஒரு ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர். இவர் கடந்த மாதம் நிர்மல் என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது திரைப்பட வில்லன் வசனம் பேசுவது போலப் பே()சியிருக்கிறார்,  அவர் பேச்சு 64 நிமிடங்கள் நீடித்தது. முழுதும் இந்துக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகள், பாரத தேசத்தின் தொன்மை மிக்க வரலாறு இவற்றை சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்தது அந்தப் பேச்சு.

சான்றுக்குச் சில இங்கே:

ஏ இந்துஸ்தானமே! நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம், நீ 100 கோடி பேரைக் கொண்டிருக்கிறாய். 15 நிமிடங்கள் காவல்துறையை அகற்று. யார் வலுவானவர்கள் பார்த்துவிடலாம்.

இந்துஸ்தானமே! இன்று என் முன்னால் ஒலிபெருக்கி இருக்கிறது. நாளை வேறெதாவது இருக்கும். அப்போது இந்த நாட்டில் ஓடும் ரத்த ஆறு போல ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பார்த்திருக்க முடியாது.  

Thursday 17 April 2014

கவனமாக எழுதுங்கள் தோழரே!

புலமைபித்தன் தமிழக அரசியலில் எழுதிய (வழமையான) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பால.கௌதமன் அவர்களின் தெளிவான பதில்.
_____________________________________________

நடுநிலையாளராக விமர்சிப்பதற்கு நாணயம் தேவை. ஈ.வே.ராவின் தொண்டன் என்பதால் மட்டுமே நீங்கள் நடுநிலையாளராகி விட முடியாது. ஐயா புலமைப்பித்தன் அவர்களே, மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளவர்  என்றும் தாங்கள் ஈ.வே.ராவின் கொள்கையை ”அணு அளவும் பிசகாமல் ஏற்றுக் கொண்டவர்” என்றும் 16.04.2014 தமிழக அரசியலில் எழுதி உள்ளீர்கள். இதில் தாங்கள் வைக்கும் குற்றச்சாட்டு காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்பது. காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் உங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் வீர சாவர்கர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் பொய்யுரைத்து மெய்ப்பிக்கும் கோயாபல்ஸ் தத்துவத்தை நீங்கள் பின்பற்றலாமா? நீங்கள் இம்மியளவும் பிசகாமல் பின்பற்றும் ஈ.வே.ராவின் தத்துவமும் பொய்யின் அடிப்படையிலானது தானோ? 

Friday 21 March 2014

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் பூவோடு எடுத்துச் செல்லத் தடை - இஸ்லாமியர்கள் அராஜகம்!




பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி பெண்கள் பூவோடு எடுத்துக் கொண்டு  திருவள்ளூர் வீதி வழியாக  காலங்காலமாக செல்வது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஊர்வலப்பாதையில் செல்வதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுருக்கும் கட்டுரையின் லிங்க்:

http://tinyurl.com/pb7j2tv


Sunday 16 March 2014

சென்னையில் சாமி கும்பிட்ட இந்துவை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு இஸ்லாமியர்கள் அராஜகம்! கண்டெக்டரும் உடந்தை

பாரதத்தின் மீது படையெடுத்து இவ்வுலகிற்கே குருவாக இருந்த நம் நாட்டைச் சின்னாபின்னமாக்கி இரத்த ஆறு ஓட விட்டு, நம் பாரத நாட்டை துண்டாடிய பின்னும் அடங்காத வெறியுடன் நம்நாட்டின் பண்பாட்டை அழித்து இந்நாட்டை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார்கள் அடிப்படைவாத இஸ்லாமியர்கள். இதற்காக இந்துக்களை அடித்து பயமுறுத்தி மதம் மாற செய்வது, இந்துக்களுக்காக தொண்டாற்றும் இந்துத் தலைவர்களை கொலை செய்வது, இந்துக் கோவில்களை நாசப்படுத்துவது, இந்துப் பெண்களை கவர்ந்துச் சென்று, அவர்கள் வாழ்வை கெடுப்பது, இந்து இளைஞர்களை ஏமாற்றி மதம்மாறச் செய்து அவர்களைப் பயங்கரவாதியாக மாற்றுவது என்று பல வகையிலும் அவர்கள் வெறியாட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக போலி மதச்சார்பின்மை பேசி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் வேரூன்ற வசதியாகி விட்டது. இன்று நாடு முழுவதும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இதில் புதிய வரவாக, கிறிஸ்தவர்களைப்போல் அடுத்த மதத்தினரைப் பழித்து மதமாற்றும் சூழ்ச்சியையும் இவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்.

இதோ! நம் இந்து சகோதரர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மூலம் நம்மால் இதை நன்கு அறிந்து கொள்ள முடியும். இந்த சம்பவங்களை கேட்கும் போது நாம் நம் பாரத நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் நம்முள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முருகன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது வழியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலய கோபுரம் வந்துள்ளது இதை கண்ணில் கண்டவுடன் வணங்கியுள்ளார். இது தெய்வ நம்பிக்கையுள்ள இந்துக்கள் இயல்பாக செய்யும் ஒரு செயல். இதைக்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை அருகில் இருந்த அடிப்படைவாத முஸ்லீம் நபரால். உடன் முஸ்லீம் நபர் முருகன் மனத்தை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்துக்கடவுளான சிவபெருமானை ஆண்குறி என்று கேவலமாக பேசி இதைப் போய் வணங்குகிறாயே என்று கூறியுள்ளார். இதை எதிர்பாராத முருகன் அவரிடம் முதலில் அமைதியாக என் நம்பிக்கையில் தலையிடாதீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கொடூர எண்ணம் கொண்ட அடிப்படைவாத முஸ்லீம் நபரோ மீண்டும் மீண்டும் இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார். இதனால் மிகவும் மனவேதனையடைந்து உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் கோவமாக இந்து மதத்தை அவமதிக்காதீர்கள் வீணாக என்னிடம் பிரச்சினை பண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார். உடன் அந்த பேருந்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களும் சேர்ந்து கொண்டு முருகனை உன் கை கால்களை வெட்டிவிடுவோம், ஜமாத்திலிருந்து உன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர். பேருந்து நடத்துனரும் பஸ்ஸை நிறுத்தி அவரை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டார். இந்த நாட்டில் நம் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வியுடன் அடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

மேற்கூறிய சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு முருகன் ராயபுரம் சென்றுள்ளார். அவர் பெரியம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பையன் கோவில் சென்று விட்டு வந்துள்ளான். அவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்துள்ளான். அவனை அப்பகுதியில் வசிக்கும் ஒரு வயதான அடிப்படைவாத முஸ்லீம் ஒருவர் அவனை அழைத்து நீ கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு உன் மதச்சின்னங்களை அகற்றிவிட்டு இஸ்லாத்தில் சேர்ந்து விடு நீ இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டால் உனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி பேசி மதம் மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை கண்ட முருகன் அந்த முஸ்லீமிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லாமல் கிளம்பவுமே அவரை தடுத்து அவர் கையை பிடித்துள்ளார். அவ்வளவு தான் உடன் அந்த அடிப்படைவாத முஸ்லீம் என்னை அடிக்கவருகிறாயா என்று கூக்குரலிட பிரச்சினை கலவரத்திற்கென்றே இருக்கும் முஸ்லீம்கள் திரண்டு விட அந்த இடமே உடன் ஒரு கலவரச் சூழல் நிலைக்கு தள்ளப்பட்டது. பின் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேசி கலைந்து போக சொல்லி இருக்கிறார்கள். முருகனை காவல்துறை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு இந்துவை கட்டாயப்படுத்தி மதம்மாற்றுவதற்கு ஒருவர் செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னே இவர்கள் இஸ்லாமிய பாசம்?

சம்மந்தமில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவன் போல் நாடகமாடி, கூட்டமாக கூடி அச்சுறுத்தி காரியம் சாதிப்பதை வழக்கமாக்கி விட்டனர் இந்த இஸ்லாமியர்கள். இவர்கள் ஒட்டிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் இதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு இந்துவும் முருகனை போல் தன் கண் முன்னால் நிகழும் அநியாங்களை எதிர்க்கவேண்டும் அப்பொழுதுதான் நம் நாட்டின் பண்பாடும் ஒருமைப்பாடும் காக்கப்படும். அச்சம் சிறிதுமின்றி இந்து மதத்தை விட்டுக்கொடுக்காமல் முஸ்லிம் அடிப்படைவாதிகளை எதிர்த்து போராடிய இந்த இளைஞரை நாம் பாராட்டுகிறோம். 

நன்றி: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்